ஆவடி கமிஷனரகத்தில் 18 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம்.. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவு
சென்னை: சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். ஆவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டராகவும், எண்ணூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா வெளியிட்ட உத்தரவின் படி,பொன்னேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழன்பன் பொன்னேரி இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். செங்குன்றம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் எண்ணூர் இன்ஸ்பெக்டராகவும், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அம்பத்தூர் எஸ்டேட் இன்ஸ்பெக்டர் கோபிநாத் முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டராகவும், எண்ணூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அகிலன்ராஜ் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம்.சி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரபு பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆவடி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அசோக்குமார் எஸ்.ஆர்.எம்.சி. இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டர் சடையாண்டி அம்பத்தூர் ஸ்டேட் இன்ஸ்பெக்டராகவும், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக் கொரட்டூர் இன்ஸ்பெக்டராகவும், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மணலி புதுநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications