Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீர்க்கதரிசி பாபா வாங்கா பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்களே? ஏஐ டூ ஏலியன்கள்.. 2026 கணிப்பு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா, 20ம் நூற்றாண்டில் பல உலக நிகழ்வுகளை முன்னரே கணித்தவர்... அவரது பல கணிப்புகள் நிரூபணமாகி உள்ளன.. அதனால் ஒவ்வொரு வருட முடிவிலும் பாபா வங்கா சொல்லும் கணிப்புகள் உலக மக்களின் கவனத்தை பெற்றுவிடும்.. அப்படித்தான் அவரது 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் மீண்டும் பேசப்படுகின்றன. அவைகள் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

2026 புத்தாண்டு வரப்போகிறது.. இன்னும் 2 நாள்தான் உள்ளது.. உலகப் போர்கள், இயற்கை பேரழிவுகள் போன்ற அவரது கணிப்புகள் பல பலித்துள்ள நிலையில், வரப்போகும் ஆண்டு குறித்தும் பாபா வாங்கா கணிப்புகள் எழுதி வைத்துள்ளார்..

Baba Vanga 2026 AI predictions aliens 2026

அந்த கணிப்புகள் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. குறிப்பாக, 2026ல் மூன்றாம் உலகப் போர் குறித்து பாபா வாங்கா கணித்துள்ளார்..

உலகின் வல்லரசு நாடுகளுக்கிடையே நிலவும் அகந்தையும் அதிகாரப் போட்டியும், ஒரு பெரும் போராக வெடிக்கலாம், முக்கியமாக ரஷ்யா-அமெரிக்கா இடையேயான மோதல்கள், சீனா-தைவான் விவகாரம் போன்றவை இந்த உலக போருக்கு அடித்தளமாக அமையும் என்று கணித்துள்ளார்..

விண்வெளி ஏலியன்கள்

அதேபோல வரும் வருடம், அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அளவுக்கு இந்தப் போர் பயங்கரமாக இருக்கும் என்றும் ஏற்கனவே பாபா வாங்கா கணித்துள்ளார்.

அதேபோல 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி ஏலியன்களை நேரக்கு நேர் சந்திப்பார்கள்., பூமியின் வளிமண்டலத்தில் ஒரு பெரிய, மர்மமான விண்கலம் நுழையும். அது மனித வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் பாபா வாங்கா கணித்து கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வரும் என்றும் கணித்துள்ளார்.

AI முதல் சிறிய மின்னணு சாதனங்கள்

இந்நிலையில்தான், வரக்கூடிய 2026-ம் ஆண்டில் மனித குலம், ஸ்மார்ட்போன்கள், கணினி, சிறிய மின்னணு சாதனங்கள், மற்றும் ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை மிகவும் சார்ந்திருப்பார்கள் என்ற பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்களது அன்றாட வாழ்க்கையை எளிதாக்க சிறிய மின்னணு சாதனங்களை அதிகமாகச் சார்ந்திருப்பார்கள், அந்த சாதனங்கள் மனிதர்களின் நடத்தை, உறவுகள், கவனம் செலுத்தும் திறன் போன்றவற்றை மாற்றக்கூடும்..

இந்த சாதனங்கள் மனிதர்களின் நடத்தை, உறவுகள், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதித்து, மன அழுத்தம், கவலை, தூக்கக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவார்கள்" என்றெல்லாம் கணித்துள்ளார் பாபா வாங்கா.

ஏஐ என்ற வார்த்தை?

ஆனால், பாபா வாங்கா தன்னுடைய கணிப்புகளில் ஏஐ என்று குறிப்பிடவில்லை. ஆனால் மனிதர்கள் அதிகமாக இயந்திரங்களை சார்ந்தவர்களாக மாறுவார்கள் என்று மட்டுமே கூறியிருப்பதாக ஒரு சாரார் கூறுகிறார்கள்..

மனிதர்களின் முடிவெடுக்கும் திறனை விஞ்சும் அளவுக்கு வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதாகவும், அது மனித வாழ்க்கையின் முக்கிய துறைகளில் கட்டுப்பாட்டைப் பெறக்கூடும் என்றும் என்றுதான் எச்சரித்துள்ளாரே தவிர, ஏஐ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்கிறார்கள்.

ரோபோக்கள்

மொத்தத்தில் 2026-ம் ஆண்டில் மனிதர்கள் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தினாலும், அதை சரியாகவும் அளவோடு பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் நம்மை உதவியாக இருக்கலாமே தவிர, அதற்கு அடிமையாக மாறக் கூடாது. ரோபோக்கள், ஆட்டோமேஷன் வேலை மற்றும் வாழ்க்கையில் பல உதவிகளை செய்தாலும், கட்டுப்பாடு வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பாபா வங்காவின் கணிப்புகளின் மூலம் தெரியவருகிறது..

மனிதர்கள் சிறிய தொழில்நுட்பங்களின் அடிமைகளாக மாறுவார்கள் என்ற பாபா வாங்காவின் இந்த கணிப்புகள்தான் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+