சென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு
சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர்1ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர்1ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்பாட்டத்துக்கு காவல் ஆணையர் தடை விதித்து அனைத்து காவல் நிலையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் விவசாயிகள் பஸ் மறியல், போராட்டம், ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

வேளாண் மசோதாக்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் எதிர்கட்சியினர் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை போராட்டம் ஆர்பாட்டம் நடத்த தடை விதித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications