கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்!
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிமுக சார்பில் ராயபுரம் மனோ வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின், 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி கொளத்தூர். ஸ்டாலின் சென்னையில் இருக்கும் போதெல்லாம் கொளத்தூர் தொகுதிக்குச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். ஏராளமான திட்டங்களையும் தனது தொகுதியில் செயல்படுத்தி உள்ளார் ஸ்டாலின். வரும் சட்டசபை தேர்தலிலும் அவர் கொளத்தூர் தொகுதியிலேயே மீண்டும் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக வேட்பாளர்
இந்நிலையில், அதிமுக சார்பில் இதுவரை 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதில், கொளத்தூர் தொகுதியும் ஒன்று. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கப்போகும் வலுவான அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து ராயபுரம் மனோ அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றிய காலத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் ராயபுரம் மனோ. இந்நிலையில், முதல் முறையாக அவர் ஸ்டாலினை நேரடியாக எதிர்த்து நிற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ராயபுரம் மனோ?
ராயபுரம் மனோவின் இயற்பெயர் மனோகர். வட சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பி.டெக் முடித்த மனோகர் எம்.டெக், எம்பிஏ படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு அரசியலில் நுழைந்த மனோகர், வட சென்னை மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்.
காங்கிரஸ் கட்சியில் சென்னை மாவட்டத்தில் முக்கியத் தலைவராக மாநில அளவில் அறியப்பட்டவர்களில் ராயபுரம் மனோ முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த ராயபுரம் மனோ, மூப்பனாரின் தீவர ஆதரவாளராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது ராயபுரம் மனோவும் தமாகாவில் இணைந்தார்.
ஜிகே வாசன் ஆதரவாளர்
மூப்பனார் மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து தமாகாவிலேயே இருந்த அவர் பின்னர் ஜி.கே.வாசன் காங்கிரஸுக்கு திரும்பியபோது தானும் காங்கிரஸுக்குத் திரும்பினார். காங்கிரஸில் ஜிகே வாசனின் முக்கிய ஆதரவாளராக விளங்கிய அவர் வாசன் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
பின்னர் ஜிகே வாசன் மீண்டும் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது மனோ காங்கிரஸிலேயே இருந்தார். சில காலம் திருநாவுக்கரசர் ஆதரவாளராக இருந்தார். சென்னையில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவது, கூட்டங்கள் நடத்துவது என காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக இயங்கியவர் மனோ.
அதிமுகவில் இணைந்தார்
சத்தியமூர்த்தி பவனில் ரூ.20 லட்சம் செலவில் 150 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தை அமைத்தவர் ராயபுரம் மனோ தான். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்த அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து அதிமுகவில் இணைந்தார் ராயபுரம் மனோ. அதிமுகவில் எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பை அளித்தார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியிடம் தோல்வி அடைந்தார் ராயபுரம் மனோ. அங்கு 3 ஆம் இடம் பிடித்த பாஜகவின் பால் கனகராஜ் 1.13 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து
இந்நிலையில், முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் கொளத்தூரில் களமிறங்க இருக்கிறார் ராயபுரம் மனோ. வடசென்னை ஏரியாவில் நன்கு பரிச்சயமான முகம் என்பதால், ஸ்டாலினை எதிர்த்து நிற்க சரியான ஆள் ராயபுரம் மனோ தான் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த தொகுதி வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications