3 ராஜா + 3 கட்சி.. உருவான "முக்கோண இடி".. இதுக்கு கம்மியா சீட் கேட்டிருக்கலாமே? உள்ளதும் போச்சா? அட
சென்னை: அதிமுக, பாஜகவில் கூட்டணி முடிவாகாத நிலையில், தேமுதிக என்ன செய்ய போகிறது? யாருடன் இணைய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இது தொடர்பாக பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. தங்கள் கூட்டணி கட்சியோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தி வருகின்றன..

அந்த வகையில் திமுக லீடிங்கில் உள்ளது.. தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 2வது கட்ட பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்க போகிறது. இப்போதைக்கு கூட்டணியில் பலமாகவும், வேகமாகவும் உள்ளது திமுக என்றே சொல்லலாம்.
கூட்டணி முடிவு: ஆனால், அதிமுக, பாஜகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இவர்களுடன் ஏற்கனவே கூட்டணியிலிருந்த ஜிகே வாசன் போன்ற தலைவர்கள், அதிமுக, பாஜக என யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி உள்ளனர்... இதில், பாமக, தேமுதிகவும், அதிமுக, பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.. 2 கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்ததால், தங்களது தொகுதி தொடர்பான எதிர்பார்ப்பை பாமக, தேமுதிக அதிகரித்துவிட்டது..
அதாவது பாமக 12 தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தெரிகிறது. ஆனால், தேமுதிகவோ, தேமுதிக 14 + 1 என்று அறிவித்து, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பகீரை கிளப்பிவிட்டது. ஆனால், தேமுதிக இப்படி அறிவித்த கையோடு, அதிமுக மற்றும் பாஜக, தங்களால் இவ்வளவு தொகுதி தரமுடியாது என்று சொல்லிவிட்டதாக தெரிகிறது.
4 சீட் தானா: அப்படியிருந்தும்கூட, தேமுதிகவிற்கு 4 சீட் வரை அதிமுக தருவதாக நினைக்கிறது.. சீட் விவகாரத்தில் முன்பின் வித்தியாசம் இருந்தாலும், மாநிலங்களவை சீட் தருவதற்கு சான்ஸே இல்லை என்று கூறிவிட்டதாம். இது தொடர்பான ஒரு பிரத்யேகமான செய்திதான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
அதாவது, 14+1 என்று பிரேமலதா அறிவித்த மாத்திரத்தில், அக்கட்சியுடன் பேசுவதையே நிறுத்துங்கள் என்று மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி 3 பேருக்கும் உத்தரவு போட்டுவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி... அதனால்தான், பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என்ற யோசனையையும் கைவிட்டுவிட்டார்களாம்.
சாராம்சம்: இதனை தாமதமாக உணர்ந்த பிரேமலதா, 14 சீட் என்பது கட்சியினர் சொன்ன யோசனை... ஆனால், இறுதி முடிவை எடுக்க எனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். அதேசமயம், ராஜ்யசபா கேட்பது எங்கள் உரிமை" என்று சொல்லி அதாலடி காட்டினார்..
அதுமட்டுமல்ல, அதிமுக, பாஜக 2 கட்சிகளின் தலைமை க்கும் சுதீஷ் மூலம் தகவலையும் தந்தாராம் பிரேமலதா. அதாவது, "14 சீட் என்பதில் யோசிக்க வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுங்கள், வருகிறோம், பேசலாம்" என்பதே அந்த தகவலின் சாராம்சமாம்..
ராஜ்யசபா சீட்: ஆனால், இதற்கு ரிட்டன் தகவலாக, "ராஜ்யசபா கோரிக்கையை கைவிட்டுவிட்டால் வாருங்கள், பேசலாம். அந்த கோரிக்கையுடன் தான் வருவீர்கள் என்றால், வர வேண்டாம்... ராஜ்யசபா சீட் கேட்பது உங்கள் உரிமை என்பதெல்லாம் எப்படி என்பது எங்களுக்குப் புரியவில்லை... ராஜ்யசபா சீட் கோரிக்கையை கைவிடுங்கள்" என்று தெளிவுப்படுத்தி விட்டனவாம்..
இதையெல்லாம் சொல்லி 1 வாரமாகிவிட்டதாம். ஆனால், பிரேமலதாவிடமிருந்து மீண்டும் பதில் வராததால், தேமுதிகவை அழைக்க வேண்டாம் என்கிற முடிவில் அதிமுக, பாஜக இருக்கின்றனவாம்..
என்ன முடிவு: அதேசமயம், ராஜ்யசபா கோரிக்கையை கைவிடும் பட்சத்தில், அதிமுக, பாஜக இரு கட்சிகளும் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கவே முடிவு செய்துள்ளனவாம்.. இந்த 2 சீட்களை பெற்றுக் கொள்ள தேமுதிக முன்வருமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா












Click it and Unblock the Notifications