சென்னை மக்களுக்கு "ஹேப்பி நியூஸ்".. ஒன்றல்ல.. இனி ரெண்டாமே.. அமைச்சர் அதிரடி.. மளமளவென துவங்கிய பணி
சென்னையில் 2வது ஏர்போர்ட் அமைய ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளன
சென்னை: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, ஜரூர் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
வருடத்துக்கு 4 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது நம்முடைய சென்னை விமான நிலையம். அதனால், சென்னையில் 2வது விமான நிலையத்தை அமைக்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த சில வருடங்களாகவே திட்டமிட்டு வருகிறது.
மேலும், 'சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.

ஏர்போர்ட்
எனவே, இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியே விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த விமான நிலையம் அமைப்பதற்கு, 2 ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் தேவைப்பட்டது.. அந்த இடத்தை இறுதி செய்யும்படி விமான போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையத்தை அமைக்கலாம் என்ற திட்டம் முதலில் பரிசீலனையில் இருந்தது.

சிந்தியா
பிறகு அந்த திட்டம் கைவிடப்பட்டு, உத்திரமேரூரில் ஏர்போர்ட் அமைக்க போதிய வசதிகள் உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. பின்னர், மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும் அத்திட்டம் பரிசீலனையில் இருந்தது.. இந்நிலையில், புது ஏர்போர்ட் குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்..

2வது ஏர்போர்ட்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம பேசிய அவர், "சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு, ஆசை. இதற்காக சென்னை அருகே இரண்டு இடங்கள் தேர்வாகி உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளான பன்னுார் அல்லது பரந்துாரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரிந்துரைத்துள்ளது.. வரும் செப்டம்பரில் இதற்கான பணிகள் துவங்கி, 2024க்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

தென்னரசு
இதுதொடர்பாக டெல்லியில் வரும் 16ம் தேதி, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க உள்ளார்" என்று சிந்தியா தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே பேச்சளவில் இருந்த, சென்னையின் 2வது ஏர்போர்ட் விவகாரம் தற்போது வேகம் எடுத்துள்ளது, சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications