பொங்கலுக்கு டபுள் லட்டு.. தட்டி தூக்கும் தமிழ்நாடு அரசு! பாதிக்குப் பாதி உயரும் மகளிர் உரிமைத் தொகை!
சென்னை: தமிழக பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ்நாடு அரசின் முக்கியமான நலத்திட்டமாக விளங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொகை 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு உண்மையாகும் பட்சத்தில், தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்த திட்டங்களில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை திட்டம். தேர்தல் அறிக்கையிலேயே பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற இந்த வாக்குறுதி, திமுகவின் முக்கியமான தேர்தல் ஆயுதமாக மாறியது.
அதனால் பெண்கள் மத்தியில் திமுகவுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகும் உடனடியாக இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை என்ற காரணத்தை முன்வைத்து, திட்டம் தொடர்ந்து தள்ளிப் போனது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக விமர்சித்தன. குறிப்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள், "தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்?" என்று மேடைக்கு மேடை கேள்வி எழுப்பின. இந்த சூழ்நிலையில், 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.
மாதந்தோறும் ரூ.1,000
முதற்கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் ரூ.1,137 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கிய பிறகு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மகளிர் உரிமைத் தொகை 2.0
அதே நேரத்தில், பல பெண்கள் தங்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக அவர்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இனிப்பான செய்தி
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தப்படும்" என்று முதல்வர் கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்" என்று கூறினார். இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக திமுக வட்டாரங்களில் தகவல் பரவத் தொடங்கியது.
ரூ.1500 மகளிர் உரிமைத்தொகை
இந்த அறிவிப்பு சட்டசபையில் ஆளுநர் உரையில் இடம்பெறுமா, அல்லது இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா, அல்லது தேர்தல் அறிக்கையில் மட்டும் இடம்பெறுமா என்ற குழப்பம் நீடித்த நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழக பெண்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாகவும், அரசியல் ரீதியாக திமுகவுக்கு முக்கியமான திருப்பமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications