பாத்துட்டே இருங்க.. "கழட்டி" விடறாங்களா இல்லையான்னு.. போட்டுத் தாக்கிய குஷ்பு!
சென்னை: வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம் என பாஜகவின் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் இந்த முறை தேர்தலை சந்தித்தன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தேர்தல் முடிவுகளும் காலையில் இருந்து வெளியாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி, பிறகு திடீரென பின்தங்கிவிட்டது... இப்போதைக்கு பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

ரிசல்ட்டுகள்
இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றாலும், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு கூடிவருகிறது.. எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியதாக ரிசல்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

பெரிய மாற்றம்
தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில், "வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டலாம்.. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... கூடுதல் சுமை என்று நினைத்து, அகில இந்திய காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை" என்று கிணடல் அடித்துள்ளார்.

அதிருப்தி
கடந்த டெல்லி தேர்தலின்போது, காங்கிரஸ் மண்ணை கவ்வியபோதே, குஷ்பு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.. சொந்த கட்சி என்றும் பாராமல், "நாம் போதிய அளவிற்கு செயல்பட்டு வருகிறோமா? சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறோமா? இனியாவது நாம் நமது செயலை துவக்க வேண்டும்'' என்று குஷ்பு பதிவிட்டது அப்போதைய காங்கிரஸ் தலைவர்களுக்கு கொந்தளிப்பையே ஏற்படுத்திய நிலையில், தற்போது இன்னும் பகிரங்கமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கேள்வி
ஆனால், குஷ்புவின் இந்த ட்வீட்டுக்கு, பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "ஏம்மா.. யார் யாரை வெச்சிக்கிறாங்க, கழட்டி விடறாங்கன்னு புரோக்கர் வேலை பார்க்கிறதுதான் உங்க வேலையா? இன்னும் புள்ளையே பொறக்கல, அதுக்குள்ளே பேரு வெக்கறீங்களே என்றும் வெறும் 1000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் இருக்கிறார்கள்.. எப்படி இப்பவே முடிவு செய்தால் எப்படி?" என்றும் ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications