எதிர்காலத்தில் இந்த வேலைக்குத்தான் பலர் சேர போறாங்க.. இந்திய போக்குவரத்தே மாற போகுது.. அரசின் முடிவு
சென்னை: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்சிகளை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது இந்தியாவில் பைக் டாக்சிகள் சட்டத்திற்கு எதிரானவை. அதாவது நீங்கள் ஒரு பைக் டாக்சியில் செல்கிறீர்கள் என்றால்.. சட்டப்படி அது தவறு. போலீஸ் பிடித்தால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கலாம்.

இந்த நிலையில் மோட்டார் வாகனங்கள் (MV) சட்டம், 1988ன் படி, ஒப்பந்த வண்டிகளின் வரையறையின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் வரும். இதை பயன்படுத்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்சிகளை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பைக் டாக்ஸி அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் என்ற ஆலோசனையை மத்திய அரசு வழங்க உள்ளதாம். பைக் டாக்சி தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் தற்போது உள்ள சூழ்நிலையை மாற்ற முடியும். தற்போது ஒழுங்குமுறை இன்றி ரகசியமாக பைக் டாக்சி ஓட்டப்படுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும், இது வெளிப்படையாக பைக் டாக்சி தொழிலில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கலாம்.
அதேபோல் பலர் இந்த வேலைக்கு மாறும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த துறை வருமானம் முறையாக வருவதாக விதிகள் கொண்டு வரப்படலாம். இந்த நடவடிக்கையானது இந்தியாவில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்கும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு பயணத்தை எளிதாக்கும். குறிப்பாக அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் மிகவும் மலிவு விலையில் பயணிக்கும் வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விதி மீறல் தொடர்பான சிக்கல்கள் காரணமாக பைக் டாக்சி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாமல் பாதுகாக்க இந்த புதிய விதி உதவும்.
பெங்களூர், சென்னை போன்ற முக்கிய நகரங்கள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்துகின்றன. பலருக்கு மாற்று வருமான ஆதாரமாகவும், மற்றவர்களுக்கு மிகவும் மலிவு மற்றும் விரைவான போக்குவரத்து சேவைகளுக்கான விருப்பமாகவும் செயல்படுகிறது. Rapido இன் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி, இந்த பரிந்துரைக்கு பாராட்டு தெரிவித்தார், "அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு செயலாக்கத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
60 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு பைக் டாக்ஸி துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் Rapido, இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பைக் டாக்ஸி சவாரிகளை மேற்கொள்கிறது. பைக் டாக்ஸி துறையில் மற்றொரு முக்கிய நிறுவனமாக உபெர் மோட்டோ உள்ளது.
தற்போது இந்தியாவில் பைக் டாக்சிகள் சட்டத்திற்கு எதிரானவை. அதாவது நீங்கள் ஒரு பைக் டாக்சியில் செல்கிறீர்கள் என்றால்.. சட்டப்படி அது தவறு. போலீஸ் பிடித்தால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கலாம். இந்த நிலையில் விரைவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்சிகளை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications