Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நடுரோட்டுக்கு வாம்மா".. அதிமுக மாஜியை சீண்டிய அமர் பிரசாத்! அண்ணாமலை வலது கரமாச்சே - அப்போ அதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவை விமர்சித்ததாக கூறி அண்ணாமலையை கடுமையாக சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து இருக்கிறார் அமர் பிரசாத் ரெட்டி.

அண்ணாமலையின் வலதுகரம் என்று அழைக்கப்படும் பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "நடுரோட்டுக்கு வாம்மா பேசி தீர்த்துக்கலாம் என்று பெண்களை அழைக்கும் பெருமகனார், இப்போதெல்லாம் ஊழல் என்றதும் பதறித் துடிக்கிறார். ஊழலுக்கென்றே பிறந்தவர்களுக்கு முட்டுக் கொடுத்தால் மட்டும் செய்த ஊழல் இல்லாமல் போய் விடுமா?

BJP Amar prasad reddy condemn ADMK former minister for criticising Annamalai

'தமிழகத்தில் யார் ஊழல் செய்திருந்தாலும் எதிர்ப்போம்' என சொன்னதும், 'அது எங்களுக்கும் தானே பொருந்தும்?' என கேட்டால், உப்புத் திண்ணவன் தண்ணி குடிச்சுத்தான் ஆக வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஊழலை வெளிச்சம் போட, பல்கலைக்குச் சென்று பட்டம் வாங்க வேண்டியதில்லை. கத்துக்குட்டியாக இருந்தாலும் வெளிச்சம் போடலாம் என்பதை மாஜி அமைச்சர் எப்போது உணரப் போகிறார்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனும் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநிலத் தலைவர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு திரு.அண்ணாமலை அவர்கள் அரசியலுக்கு வரவில்லை.

பல்வேறு புதிய திட்டங்களோடு மக்கள் வாழ்வு வளம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஜெயக்குமார் அவர்கள் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார்.

இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று திரு.அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டது கூட ஜெயக்குமார் அவர்களுக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன்.

எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. எனவே எங்கள் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+