திருச்சி சூர்யா சர்ச்சை: ட்விட்டரில் திமுக ராஜீவ் காந்தி - பாஜக அமர் பிரசாத் ரெட்டி உக்கிர மோதல்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ட்விட்டரில் விமர்சனம் செய்ததால் நள்ளிரவில் திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தியை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக சாடினார்.
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் திருச்சி சூர்யா. திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன். பாஜகவில் சேர்ந்தது முதலே பல்வேறு சர்ச்சைகளில் திருச்சி சூர்யா அடிபட்டு வருகிறார்.
திருச்சி சூர்யா, பாஜகவின் பெண் நிர்வாகி டெய்சி சரணுடன் போனில் ஆபாசமாக பேசி சண்டையிட்ட ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில்
அதிகம் பகிரப்பட்டது. இது பாஜகவில் பெரும் புயலையே கிளப்பிவிட்டிருக்கிறது.

காயத்ரி நீக்கம்
பெண் நிர்வாகியை ஆபாசமாக இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யா மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் செயல்பட்டதாக கூறி 6 மாத காலத்துக்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பெண்ணை இழிவாக பேசிய திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுப்பதா? என்கிற விமர்சனமும் எழுந்தது.

கேடி ராகவன் கேஸ்
இதனைத் தொடர்ந்து திருச்சி சூர்யா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திருச்சி சூர்யா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவும் விவாதத்துக்குரியதாக மாறியது. பாஜகவின் கேடி ராகவனின் ஆபாச பேச்சு விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாரணை குழு என்ன ஆனது என கேள்வி எழுப்பப்பட்டது.

அண்ணாமலைக்கு எப்போ தெரியும்?
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது அறிக்கையில், திருச்சி சூர்யாவின் ஆபாச பேச்சு குறித்த விவகாரம் இன்றுதான் கவனத்துக்கு வந்தது என கூறியிருந்தார். ஆனால் சர்ச்சையில் சிக்கிய டெய்சியோ 15 நாட்களுக்கு முன்னரே அண்ணாமலையிடம் இந்த பிரச்சனை பேசப்பட்டது. அப்போது இருவருக்கும் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார் அண்ணாமலை என கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தி- அமர் பிரசாத் ரெட்டி
டெய்சியின் இந்த ஊடக பேட்டியை முன்வைத்து அண்ணாமலை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை டேக் செய்து திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, Mr Ex officer @annamalai_k ...உங்கள் யோக்கியதை இவ்வளவு தானா?? என கேள்வி எழுப்பி இருந்தார். இது பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது. பாஜகவின் நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, யோக்கியதை பற்றி அயோக்கியன் நீ பேசலாமா??? என ராஜீவ் காந்திக்கு பதிலடி கொடுத்தார். ட்விட்டரில் நள்ளிரவில் நடந்த இந்த யுத்தம் ரணகளமாகிவிட்டது!












Click it and Unblock the Notifications