‛‛சென்னையில் ஜொலிஜொலித்த ஜேபி நட்டா’’.. வேஷ்டி-சட்டை அணிந்து பாஜக யாத்திரையில் அசத்தல்
சென்னை: சென்னை துறைமுகம் சட்டசபை தொகுதியில் நடக்கும் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ் கலாசார முறையில் அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்தது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடங்கினார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த யாத்திரை 234 சட்டசபை தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த யாத்திரை இன்று சென்னை துறைமுகம் தொகுதியில் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை நுழைந்தது. தமிழகத்தில் 200 தொகுதியாக துறைமுகத்தில் இந்த யாத்திரை என்பது நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மாலையில் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து ஜேபி நட்டா சென்னை வந்து இறங்கினார். குர்தா மற்றும் பேண்ட் அணிந்து வந்திறங்கிய ஜேபி நட்டாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட பிற தலைவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த ஜேபி நட்டா ‛என் மண் என் மக்கள்' யாத்திரையில் பங்கேற்றார்.
இந்த வேளையில் அவர் தமிழ் கலாசார உடை அணிந்திருந்தார். அதாவது வெள்றை நிற சட்டை, வேஷ்டி அணிந்து அவர் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இது அனைவரையும் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications