எதிர்க்கட்சிகளுடன் பாஜகவும் ஆலோசனை “யப்பா.. இது ட்விஸ்ட்டா இருக்கே” ராஜ்நாத் சிங் போட்ட போன் கால்!
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பேசியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடனும் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்குகளில் சுமார் 48 சதவீத வாக்குகளை பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ளது. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது.

வேட்பாளர்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவில் ராஜ்நாத் சிங், மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தி டஃப் கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

ஆலோசனை கூட்டம்
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

சரத் பவார் மறுப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, வேறொருவரை பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அடுத்த கூட்டம் குறித்து முடிவெடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பேசியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

கட்சித் தலைவர்களுடன்
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடனும் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்நாத் சிங் தன்னிடம் பேசிய தகவலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

பேசியது என்ன
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனும் தேர்ந்தெடுக்க பாஜக விரும்புவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அவர்களின் கருத்தைக் கேட்ட ராஜ்நாத் சிங்கிடம், பாஜக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளரை அறிவிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications