அதிமுகவினரே மாத்தி பேசுவாங்க.. மோடி தான் பிரதமர்னு சொல்லுவாங்க.. பற்ற வைத்த கரு.நாகராஜன்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது எனக் கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
அண்மையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவினர் அறிவித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர். கூட்டணி முடிவை தேசிய தலைமையே உறுதி செய்யும் எனத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். தேசிய தலைவர்களுடன் அங்கு ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. காலில் ஒரு கட்டையை கட்டிக்கொண்டு ஓட்டப்பந்தயந்தில் ஓடுவது போல், பாஜகவோடு கூட்டணியை வைத்துக்கொண்டு நாம் வெற்றி பெறுவது என்பது சற்று கடினமாகவே இருந்தது. அந்த தடையும் இன்று நீங்கி விட்டது. இனிமேல், அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது.
அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னைத் தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்காக 40, 50 வருடம் உழைத்ததை போல், அனைவரை பற்றியும் விமர்சனம் செய்கிறார் பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது என்ற அதிமுக முன்னாள் நத்தம் விஸ்வநாதன் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், "இதுநாள் வரை அந்த தடை நத்தம் விஸ்வநாதனுக்கு தெரியவில்லையா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "அவங்களே ஆதரித்து பேசுவாங்க.. மாற்றி பேசுவாங்க.. மோடி தான் பிரதமர்னு சொல்லுவாங்க, இதை வழக்கமாக பார்த்து கொண்டுதான் உள்ளோம். இதற்கெல்லாம் எங்கள் தலைவர் பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆலோசனை கூட்டம் பற்றி பேசிய கரு.நாகராஜன், "3 மாதங்களுக்கு ஒருமுறை பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டம் நடைபெறுவதால் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அண்ணாமலை இந்த கூட்டத்தில் சிறிது நேரம் கலந்து கொள்வார். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும். அதற்கு கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications