தமிழ் புத்தாண்டுக்கு ஒரு வாழ்த்து சொல்லல.. திமுகவுக்கு சவுக்கடி உறுதி.. கொதித்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சித்திரை 1 ஆம் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டாக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக அரசு, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அரசாணை வெளியிட்டு அதன்படியே செயல்பட்டு வருகிறது. இன்று அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சித்திரை 1 அன்று மெளன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதலமைச்சரை, தமிழ்நாடு புறக்கணிக்கும்!
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நண்பகல் கடந்தும் நமது தமிழ்நாடு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
மேலும், இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் "ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்து மடல் எழுதும் முதலமைச்சருக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கட்சி திமுக என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றதில் இருந்தே அதிரடி கருத்துகளைப் பேசி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியை வேரறுக்க போகும் இந்தக் கூட்டணியால் முதல்வர் கண்ணில் மரண பயம் தெரிவதாக கூறியிருந்தார்.
மேலும், இன்னும் ஒரு வருடம்தான் உள்ளது. அதுவரை ஆடுங்கள் எனவும் விமர்சித்திருந்தார் நயினார் நாகேந்திரன். இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications