Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச பேச்சு- 6 மாதம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய அண்ணாமலை- ஆஹோ ஓஹோவென புகழ்ந்த திருச்சி சூர்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில நிர்வாகி டெய்சி சரணை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய விவகாரத்தில் மற்றொரு மாநில நிர்வாகியான திருச்சி சூர்யா 6 மாதம் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை தாம் ஏற்பதாக திருச்சி சூர்யா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகளான டெய்சி சரண், திருச்சி சூர்யா இருவரும் செல்போனில் பேசிய பேச்சு பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவு செய்யப்பட்ட செல்போன் பேச்சு சமூக வலைதளங்களின் வெப்பநிலையை தகிக்க விட்டது. அந்த அளவுக்கு டெய்சி சரணை மிக மிக உச்சகட்ட இழிவாக, ஆபாசமாக அர்ச்சித்திருந்தார் திருச்சி சூர்யா.

சிக்கிய காயத்ரி ரகுராம்

சிக்கிய காயத்ரி ரகுராம்

இத்தகைய ஆபாச பேச்சுகளை உதிர்த்த திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும்; நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்தார் பாஜக நடிகை காயத்ரி. இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கோபப்படுத்தியது. இதனால் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டார்.

டெய்சி, திருச்சி சூர்யா சமாதானம்

டெய்சி, திருச்சி சூர்யா சமாதானம்

இந்நிலையில் டெய்சி சரண், திருச்சி சூர்யாவை அழைத்து திருப்பூரில் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் டெய்சி சரணும் திருச்சி சூர்யாவும் சமாதானமடைந்துவிட்டதாக அறிவித்தனர். இருவரும் அக்கா, தம்பி போல பாசத்துடன் இருப்போம் என்றனர். இருவரது பேட்டியும் சமூக வலைதளங்களில் கடுமையான கேலிப் பொருளாகி இருக்கிறது.

6 மாதம் நீக்கம்.. ஆனாலும் கட்சிப் ணி

6 மாதம் நீக்கம்.. ஆனாலும் கட்சிப் ணி

இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் திருச்சி சூர்யாவை 6 மாதம் சஸ்பென்ட் செய்வதாக தெரிவித்திருந்தார். அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பெண்களை இழிவுப்படுத்துவதை பாஜக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாஜக மாநிலத் தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்ளை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம் ஆதலால் ஒரு மாநிலத் தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. ஆகவே தமிழக பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடி வரும் என கூறியிருந்தார்.

நடவடிக்கையை வரவேற்று சூர்யா ட்வீட்

நடவடிக்கையை வரவேற்று சூர்யா ட்வீட்

இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதாக திருச்சி சூர்யா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்.. என் மேல் தலைவர் @annamalai_k அவர்கள் எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் . மீண்டும் அவர் நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் . என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில் #அதிரடி_அண்ணாமலை என பதிவிட்டுள்ளார். அத்துடன் கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய போது 71 போலீசாரை ஒரே நாளில் அண்ணாமலை டிரான்ஸ்பர் செய்த செய்தி பேப்பர் கட்டிங்கையும் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திருச்சி சூர்யா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+