Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புளியில் பல்லி இருக்கு".. அடுத்த பகீரை தூக்கி போட்ட எச்.ராஜா.. திமுக மீது பாய்ச்சல்

திமுக அரசை எச்.ராஜா சரமாரி விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி என்றும், பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களில் உள்ள புளியில் பல்லி இருந்திருக்கிறது, அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.. எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எச்.ராஜா முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் தொடர்ந்து திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.. இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டி வருகிறார்.

அத்துடன் இந்து கோவில்களில் அறங்காவலர்கள் குழுத் தேர்வு மற்றும் இந்து கோவில்கள் மேம்படுத்துதல், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையின் உண்மையை அறிவிக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

டிரஸ்ட்டி

டிரஸ்ட்டி

சில தினங்களுக்கு முன்புகூட இது சம்பந்தமாக அவர் பேட்டி ஒன்றில் "கோவிலில் உள்ள தங்கத்தை டிரஸ்டி இல்லாமல் உருக்க முடியாது... அறங்காவலர் இல்லாமல் எந்த செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது... எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக் கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உண்மை தன்மை இல்லை...

இணையதளம்

இணையதளம்

நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை. எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையில் பக்திமானாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மாறாக கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்ல. ஆனால் அவருடைய தலைமையில் செயல்பட்டு வரும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசிற்கு எதிராக தான் குரல் கொடுத்து வருகிறேன். கிறிஸ்துவ மிஷினரிகள் கைக்கூலியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற கோவில்களை நிர்ணயிக்க, அரசிற்கு திறமையில்லை" என்று கூறியிருந்தார்.

 எச்.ராஜா

எச்.ராஜா

இந்நிலையில், இன்று மீண்டும் திமுக அரசை எச்.ராஜா விமர்சித்துள்ளார்.. கரூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது... இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி... பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களில் உள்ள புளியில் பல்லி இருந்திருக்கிறது.. அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.. எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+