ஆரம்பிச்சாச்சு.. நேருவை வம்பிழுத்த சுப்பிரமணிய சாமி.. ஒருத்தருக்கும் துணிச்சல் இல்லை.. பரபர ட்வீட்
தேவர் ஜெயந்தியையொட்டி சுப்பிரமணிய சாமி ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: பசும்பொன் தேவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க ஒரு எம்பிக்கு கூட துணிச்சல் இல்லை... ஆனால் நான் வைத்தேன்" என்று பாஜகவின் சுப்பிரமணியன் சாமி ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியை பொறுத்தவரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது மிகுந்த மரியாதையை வைத்திருப்பவர். அவரது சுதந்திர போராட்டத்தை பற்றி பலமுறை செய்தியாளர்களிடம் சிலாகித்து பேசியவர்.
2002-ல் நாடாளுமன்ற வளாகத்தில் பசும்பொன் தேவருக்கு சிலை வைக்கப்பட்டது.. இதற்கு மூல காரணமே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியசுவாமிதான்..

தேவர் சிலை
சமூக சீர்திருத்தவாதியும், தலித்துகள் கோவிலுக்குள் நுழைய அனுமதி பெற்றுத் தந்தவருமான தீரர் சத்தியமூர்த்தி மற்றும் தேசவிடுதலைக்காகப் போராடிய நேதாஜியின் ராணுவத்துக்கு பல உதவிகள் புரிந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் சிலைகளை நன்கொடையாக சுப்பிரமணிய சுவாமி அப்போது வழங்கினார்.

மதுரை ஏர்போர்ட்
இதன்விளைவாகவே, நாடாளுமன்ற வளாகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஆளுயர வெண்கல சிலை வைக்கப்பட்டது... இந்த சிலையை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார். அதேபோல, மதுரை ஏர்போர்ட்டிற்கும் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்து வருகிறார்.

கடிதம்
கடந்த 2016-ல் பிரதமர் மோடிக்கு, இதற்காகவே பிரத்யேகமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில்கூட, மதுரை விமான நிலையத்துக்கு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல, 2018-ல் மாநிலங்களவையிலும் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மரியாதை
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வருட தேவர் ஜெயந்திக்கும், மாநிலங்களவையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார். அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் 59வது நினைவு நாள் ஆகியவை குரு பூஜையாக இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி தினமும் அஞ்சலி செலுத்தினார்.. அந்த சிலை அருகே ஒரு போட்டோவும் எடுத்து கொண்டார்.. அந்த போட்டோவுடன் சேர்த்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் சுப்பிரமணிய சாமி..

நேரு
அதில், "இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் வீரர் தேவர்... நேருவின் தூண்டுதலால் அவர் மீது பொய்யான கொலை வழக்கு போடப்பட்டது.. நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தேவர் ஆதரித்தார் என்பதால், இந்த பொய் வழக்கு புனையப்பட்டது.. ஜெயிலில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் கூட தர மறுத்துவிட்டனர்.. அதன்காரணமாகவே அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க ஒரு எம்பிக்கு கூட துணிச்சல் இல்லை... ஆனால் நான் வைத்தேன்" என்று அதில் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications