கட்சிக்குள் போர்க்குரல்.. முடங்கிய எடப்பாடி.. நேரம் பார்த்து பாஜக வைக்கும் செக்.. 50+ இடம் வேணுமாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெற திட்டமிட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உள்ளேயும், அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலும் ஏற்பட்டு உள்ள மோதல் தொடர்பாக டெல்லி பாஜக தீவிரமாக கவனித்து வருகிறதாம். டெல்லி தலைமை இதில் விரைவில் நேரடியாக தலையிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Edappadi Palaniswami

அதிமுகவில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த பத்து நாட்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். தனது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், டிடிவி தினகரனின் இந்த விலகல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

நேரம் பார்த்து அதிமுகவிற்கு பாஜக செக்

இப்படிப்பட்ட நிலையில்தான் கோவையில் மட்டும் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளில், பாஜக 4 தொகுதிகளைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது. இதில் தொண்டாமுத்தூர் தொகுதியை கட்டாயம் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

பாஜகவின் தொகுதி பங்கீடு திட்டம்

2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, வெறும் 4 இடங்களிலேயே வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், தற்போது 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக இப்போதே அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்கான பாஜகவின் இந்த முனைப்பு, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இதுவரை இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், அரசியல் வட்டாரங்களில் இந்தக் கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவுக்கு வரும் என்பது இன்னும் தெளிவில்லை.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி

அதிமுகவிடம் பாஜக எத்தனை தொகுதிகளைக் கேட்கும், எத்தனை தொகுதிகள் இறுதியாகக் கிடைக்கும் என்பது தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியவரும். அரசியல் கட்சிகளின் வியூகங்கள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தேர்தலின் முடிவுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக அமையும். தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளும் விரைவில் ஒருமித்த கருத்துக்கு வருமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

பாஜகவின் இந்த முயற்சி அதிமுகவுக்கு எந்த அளவுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும் என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும். பாஜக இவ்வளவு தொகுதிகளைக் கேட்பது, அதிமுகவின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு சவாலாக அமையுமா அல்லது இரு கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு வெற்றியைத் தருமா என்பதை அரசியல் வல்லுநர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவே விரும்புகிறது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றால், அது கூட்டணி அமைச்சரவைதான் என்பது எனது புரிதல். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

"எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும்" என்றும் தினகரன் தெரிவித்தார். இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தினகரனின் இந்தக் கூற்றுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அமித் ஷா சென்னைக்கு வந்தபோதே இதைப்பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது" என்றார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி கருத்து

"அமித் ஷாவே எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது" என்றும் அவர் கூறினார். மேலும், "முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு டெல்லி எடுக்கும் முடிவுதான். அமித் ஷா சொன்னதை மீறி யார் என்ன பேசினாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து" என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்தக் கூட்டணி அமைகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம்" என்று உறுதிப்படுத்தினார். அதிமுக ஆட்சியில் பாஜக பங்கு பெறுவீர்களா என்ற கேள்விக்கு, "ஆம்" என்று அவர் பதிலளித்தார். பாஜக ஆட்சியில் பங்கு பெற வேண்டுமானால், அதிமுக தனிப் பெரும்பான்மை பெறக்கூடாது. இதற்காகவே பாஜக கூடுதல் இடங்களில் போட்டியிட 50+ இடங்களைக் கேட்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+