தடையை மீறி மீண்டும் பாஜகவின் வேல்யாத்திரை- சென்னை திருவொற்றியூரில் போலீஸ் குவிப்பு!
சென்னை: தமிழக அரசின் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மீண்டும் வேல்யாத்திரையை தொடங்க உள்ளதால் சென்னை திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளுக்கான வேல் யாத்திரையை நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை நடத்துவதாக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்த தடையை மீறி திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை நடத்த முருகன் முயற்சித்ததால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வேல் யாத்திரைக்கான தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் தடையை நீக்க மறுத்தது; இந்த வழக்கின் விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் இருந்து இன்று வேல் யாத்திரையை தொடங்குவதாக முருகன் அறிவித்தார்.
இதனையடுத்து சென்னை திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசின் தடையை மீறி வேல்யாத்திரை சென்றால் பாஜகவினரை கைது செய்து அழைத்துச் செல்ல போலீஸ் வேன்களும் தயார் நிலையில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications