சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 கல்லூரி மாணவிகளின் உடல்கள்! யார் அவர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூர் அருகே கடற்கரையில் 4 கல்லூரி மாணவிகளின் உடல்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரைக்கு இன்று 4 கல்லூரி மாணவிகள் வந்தனராம். அவர்கள் 4 பேரும் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட்டுள்ளனர். அப்போது ஒரு பெண் நீரில் அடித்துச் செல்லப்பட்டாராம்.

chennai beach

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மூவரும் அந்த ஒருவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் எண்ணூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது 4 பெண்களின் உடல்களும் கரை ஒதுங்கியது. இதையடுத்து அந்த உடல்களை போலீஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் ஷாலினி, தேவகி, காயத்ரி, பவானி என தெரியவந்தது. 4 பேரும் கல்லூரி மாணவிகளாம். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+