சென்னை எர்ணாவூரில் பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டு கண்டெடுப்பு.. உடனே ஓடி வந்த நிபுணர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எர்ணாவூரில் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது, ஏரியல் பாம் வடிவிலான குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது வெடி குண்டுதானா? எந்த வகையைச் சேர்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 5வது தெருவில் உள்ள முஸ்தபா என்பவரின் வீட்டில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். பள்ளம் தோண்டும்போது, ஏரியல் பாம் வடிவிலான குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டை கைப்பற்றி, அது வெடி குண்டுதானா? எந்த வகையைச் சேர்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications