சத்யபிரதசாஹூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவின் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதசாஹூ. இவர் தலைமையில்தான் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இவரது அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் எழுதியுள்ள மர்மநபர், சாஹூ அலுவலகத்தில் நிச்சயம் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் அலுவலகத்தில் முதல் தளத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது
அங்கு வருவோர் போவோரை கண்காணித்து சோதனை நடத்தினர். இதையடுத்து கடிதத்தை பெற்றுக் கொண்ட போலீஸார் அக்கடிதம் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications