சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! மெயில் அனுப்பியது யார்? சைபர் கிரைம் விசாரணை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் ஜார்ஜ் டவுனில் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நீதிபதிகளும் உயர்நீதிமன்ற ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அது போல் வழக்கு தொடர்பாக பொதுமக்கள், திரை பிரபலங்கள், காவல் துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் என வருகை தருவதுண்டு.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இமெயிலில் தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காவல் துறைக்கு புகார் தெரிவித்தனர்.
புகாரை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்களுடன் போலீஸாரும் வந்தனர். அப்போது அங்கு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் இருந்த 100- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் யார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த இமெயில் முகவரியை கண்டறிய முடியாமல் சைபர் கிரைம் போலீஸார் திணறினர்.
இந்த முறையும் யார் மெயில் அனுப்பியிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகியுள்ளது.
கடற்கரை ரயில்வே ஸ்டேஷன் அருகே மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications