Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! மெயில் அனுப்பியது யார்? சைபர் கிரைம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் ஜார்ஜ் டவுனில் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நீதிபதிகளும் உயர்நீதிமன்ற ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அது போல் வழக்கு தொடர்பாக பொதுமக்கள், திரை பிரபலங்கள், காவல் துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் என வருகை தருவதுண்டு.

chennai highcourt bomb

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இமெயிலில் தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காவல் துறைக்கு புகார் தெரிவித்தனர்.

புகாரை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்களுடன் போலீஸாரும் வந்தனர். அப்போது அங்கு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் இருந்த 100- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் யார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த இமெயில் முகவரியை கண்டறிய முடியாமல் சைபர் கிரைம் போலீஸார் திணறினர்.

இந்த முறையும் யார் மெயில் அனுப்பியிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகியுள்ளது.

கடற்கரை ரயில்வே ஸ்டேஷன் அருகே மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+