Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் புதிய அமைச்சரவை.. இணை அமைச்சர் டூ கேபினெட் அமைச்சர்.. யார் அந்த ஏழு பேர்? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் ஏழு இணை அமைச்சர்கள் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்த போது, மொத்தம் 53 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று முதல்முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஹர்ஷ் வர்தன், பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட 14 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

43 பேர்

43 பேர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். புதிய அமைச்சரவையில் 13 பேர் வழக்கறிஞர்கள், ஆறு மருத்துவர்கள், இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி ஏற்கனவே மத்திய இணை அமைச்சர்களாக உள்ள ஏழு பேர் கேபினேட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தற்போது உள் துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

Array

Array

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமலின் மகன் அனுராக் தாகூர். 46 வயதான இவர், இமாச்சல் பிரதேசத்தின் ஹமீர்பூர் தொகுதியில் 2008ஆம் ஆண்டு முதல் எம்பியாக உள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சராக இவர் இருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முகமாக அறியப்படுபவர் கிரண் ரிஜிஜு. 49 வயதாகும் இவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அருணாச்சல பிரதேசத்தின் எம்பியாக உள்ளார். இதற்கு முன் உள் துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக (விளையாட்டுத் துறை) இருந்த இவர் தற்போது அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Array

Array

66 வயதான பார்ஷோட்டம் ரூபாலா, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சராக உள்ளார். இவரும் தற்போது அமைச்சராக்கப்பட்டுள்ளார். அதேபோல முன்னாள் ஐ.ஏ.எஃப் அதிகாரியான ஆர்கே சிங் தற்போது அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். அவர் 2014ஆம் ஆண்டில் பீகாரின் அர்ரா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தற்போது மின்சார துறை இணை அமைச்சராக உள்ளார்.

Array

Array

வெளிநாட்டு தூதராக இருந்து அரசியல்வாதியானவர் ஹர்தீப் சிங் பூரி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனி பொறுப்புடன் கூடி இணை அமைச்சராக (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர், சிவில் விமான போக்குவரத்து) இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தனி பொறுப்புடன் கூடிய இனை அமைச்சராக(கப்பல் துறை) உள்ள மன்சுக் எல் மாண்டவியாவுக்கும் தற்போது அமைச்சராக்கப்பட்டுள்ளார். 49 வயதான அவர், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளவர்களுக்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+