வீட்டு மனை, நிலப்பத்திரம்.. தமிழக பத்திரப்பதிவில் மாற்றம்.. பதிவுத்துறை வைத்த புதிய டார்கெட்? வாவ்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை தமிழக பதிவுத்துறை செய்து வருகிறது.. இந்நிலையில், ஒரு புதிய தகவல் கசிந்து வருகிறது.
தமிழகத்தின் பதிவுத்துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கினை நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக கிடைக்கும் வருமானம், தமிழக அரசுக்கு பிரதான நிதி ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.

நிதியாண்டு: கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் பத்திரப்பதிவு வாயிலாக, 17,296 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இதையடுத்து, 2023 - 24 நிதியாண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில், இந்த 2024ம் வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்திருக்கிறது.
இந்த இலக்கை எட்டும்வகையில், பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வாரி வழங்கி கொண்டிருக்கிறது.. இதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஓரளவு பலன் கிடைத்து வருவதுடன், இந்த வருவாயில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
பிப்ரவரி மாதம்: கடந்த பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, 18,000 கோடி ரூபாயை தாண்டி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் மட்டும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்ட வேண்டிய நிலை பதிவுத்துறைக்கு ஏற்பட்டது.. தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததால், பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டுவிட்டதாக இதற்கு காரணம் சொல்லப்பட்டது..
இப்படிப்பட்ட சூழலில்தான், பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்... துறையின் பணிகளை ஆய்வு செய்ததுடன், பத்திரப்பதிவு வருவாயை உயர்த்தவும் பல புதிய முயற்சிகளை கையில் எடுக்க போவதாக தெரிகிறது.
புதிய இலக்கு: அந்தவகையில், பதிவுத்துறையின் வருவாய் இலக்கை, நிர்ணயிக்கப்பட்டதைவிட, இன்னும் கூடுதலாக எட்டிப்பிடிக்கவும், இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்பவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது..
சந்தை நிலவரப்படி ரியல் எஸ்டேட் துறையில், வர்த்தக மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், இந்த இலக்கினை பதிவுத்துறை நிச்சயம் எட்டிப்பிடிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். வருவாய் இலக்கை எட்ட சார் - பதிவாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதால், பதிவுத்துறை துரிதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications