அசௌகரியத்தில் பாஜக லீடர்.. "கொஞ்சம் கமலாலயத்துக்கு வர முடியுமா?".. அசராத சிபிசிஐடி.. இதெல்லாம் நிஜமா
சென்னை: தமிழக பாஜகவின் அடுத்தடுத்த பிளான்கள், அரசியல் களத்தை சூடாக்கி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்திருக்கிறது.
இன்னும் லோக்சபா ரிசல்ட் வரவில்லை.. ஆனால், அதற்குள் தமிழக பாஜக சட்டசபை தேர்தலுக்கான முன்னெடுப்புகளில் இறங்கிவிட்டது.. அதிலும் மாநில தலைவர் அண்ணாமலை ஒருபடி மேலே போய், ஆலோசனை கூட்டத்தையும் அடிக்கடி நடத்த துவங்கியிருக்கிறார். இன்றுகூட, கட்சி நிர்வாகிகளின் கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.

தாமரை: அப்போது நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசும்போது, ''ஜூன் 4ம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாடத் தயாராக இருங்கள். பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம். தாமரை அடர்ந்து, படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்கு பின் அனைவரும் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு, வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது '' என்று அண்ணாமலை சொன்னதுமே, ஒட்டுமொத்த அரங்கமும், கரகோஷம் எழுப்பியது.
ஏற்கனவே 400 இடங்களை வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வரும்நிலையில், சட்டசபைக்கான களப்பணிகளையும் இப்போதே பாஜக கையில் எடுத்துள்ளது, பல கட்சிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
நயினார் நாகேந்திரன்: அதேசமயம், தமிழக பாஜகவில் சில சங்கடங்களும் நிலவுவதை மறுக்க முடியாது.. குறிப்பாக, தேர்தல் சமயத்தில் நெல்லைக்கு கொண்டு செல்ல முயற்சித்த 4 கோடி ரூபாய் விவகாரம் பாஜக தரப்பினை விடாமல் சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்துதான் நமக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி கிடைத்திருக்கிறது.
அதாவது, இந்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர், கோவர்த்தன் உள்ளிட்டவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. ஆனால், அதற்கு ஆஜாராகாமல் தவிர்த்து வருவதுடன் கால அவகாசம் கேட்டுள்ளனர். இந்த நிலையில், 4 கோடி தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல் செய்தார் கேசவ விநாயகம்.
விசாரணை தடை: நீதிபதி சரவணன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, முதல் தகவல் அறிக்கையில் கேசவ விநாயகத்தின் பெயர் இல்லாததால் ரத்து செய்ய கோரிக்கை வைக்க இவருக்கு உரிமை இல்லை என சி.பி.சி.ஐ.டி தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணைக்கு தடை கொடுக்கவில்லை. இதனால் சி.பி.சி.ஐ.டி.யின் சம்மனுக்கு ஆஜராக வேண்டிய சூழல் கேசவ விநாயகத்துக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், "உங்கள் அலுவலகத்துக்கு வர எனக்கு அசௌகரியமாக இருப்பதால், தயவு செய்து பாஜக தலைமையகத்துக்கு வந்து விசாரிக்க இயலுமா?" என்று சிபிசிஐடி போலீசிடம் கேட்டிருக்கிறாராம் கேசவ விநாயகம்.
வேறு வழியில்லை: ஆனால், போலீஸ் தரப்பில் பாசிட்டிவ்வான பதில் வரவில்லை. இதனால், அப்செட்டாகியிருக்கிறாராம் கேசவ விநாயகம். இந்த நிலையில், "சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜராவதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications