நல்ல மழை பெய்யும்போது AC போடறீங்களா? குளிர்காலத்தில் ஏசியை இப்படி பயன்படுத்துங்கள்.. பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: வெயில் காலத்தில் ஏசி பயன்படுத்துவது இயல்பான விஷயம்தான். ஆனால், மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தலாமா? குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? என்னாகும்?
ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு அதிகமாகிறது.. கரண்ட் பில்லும் அதிகமாகிவிடுகிறது.. ஏசியின் ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வதாலும், ஏசியை முழுமையாக சர்வீஸ் செய்வதாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.. ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று விரைவில் அறை முழுவதும் பரவிவிடும்..

வெப்பநிலை: அதுமட்டுமல்லாமல், குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை வைக்காமல் 16 அல்லது 18 டிகிரியில் வைக்க வேண்டுமாம்.. மனிதனுக்கு தேவைப்படும் சராசரி வெப்பநிலையானது 24 டிகிரி என்பதால்தான், இந்த 24 அளவிலேயே ஏசியை வைத்திருக்க சொல்கிறார்கள். குறைந்தது 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸில் ஏசி பயன்படுத்தும்போது, மின்பற்றாக்குறையும் ஏற்படாது என்கிறார்கள்.
ஏசியை ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆப் செய்யாமல், ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் சேர்த்து ஆப் செய்தால், கரண்ட் பில் மிச்சமாகும். ஆனால், மழை நேரத்தில் ஏசியை பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா?
ஏசி பயன்பாடு: மழையில் ஏசி பயன்படுத்தும்போது, கரண்ட் பில் கட்டணம் அதிகமாக வாய்ப்புகள் இருக்கிறதாம்.. அதனால், கனத்த மழை பெய்யும்போது ஏசியை அணைத்துவிடுவதே நல்லது.. காரணம், மழைத்தண்ணீரும் ஏசி மூலம் வீட்டிற்குள் வந்துவிட வாய்ப்புள்ளது..
அதுமட்டுமல்ல, சூறாவளி, புயல் நேரத்தில், ஏசியின் மெயின் ஸ்விட்சையே நிறுத்திவிட வேண்டுமாம். ஏனென்றால், இடி, மின்னல்கள் வீட்டை தாக்க நேர்ந்தால், அது மின்சார கம்பிகள் வழியாக சென்று, ஏசி யூனிட்டையே சேதப்படுத்த வாய்ப்புண்டு. லேசான மழை பெய்யும் நேரத்தில் ஏசியை நாம் உபயோகபடுத்தலாம் என்றாலும், மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தும்போது, வழக்கத்தை விட வேகமாக உஷ்ணமாகிவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சூறாவளி: லேசாக மழை பெய்யும்போது, ஏசியை பயன்படுத்தலாம்.. இதனால், வெளியேயிருக்கும் ஏசி யூனிட்டிலிருந்து அழுக்குகள் சுத்தமாகும். ஆனால், அதிகமான காற்று, சூறாவளி, புயல் போன்ற நேரங்களில், ஏசி யூனிட்டுகளை சேதமடையாமலும் கவனித்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு
மழைக்காலத்தை போலவே, குளிர்காலத்திலும் ஏசியை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. காரணம், வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள குளுமை தேவைப்படுவதைப்போல, குளிர்காலத்தில் குளிர்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வெப்பம் தேவைப்படுகிறது..
குளிர்காலம்: எனவே, குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தினாலும், அவை ரிப்பேர் ஆகிவிட நிறைய வாய்ப்புள்ளது.. ஏசியிலுள்ள கம்ப்ரசர் இயங்க வேண்டுமானால், இதற்கென அடர்த்தி அதிகமுள்ள கெமிக்கல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது... இந்த எண்ணெய், குளிர்காலத்தில் உறையக்கூடியது என்பதால், ஏசியை பயன்படுத்தும்போது, ஏசியின் காயில்கள் பாதிக்கப்படலாம்.
இதுவே, ஹீட்டர் வசதியுள்ள ஏசிகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. எனவே, மழைக்காலத்தை போல, குளிர்காலத்திலும் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. தேவைப்பட்டால், ஏசி கம்ப்ரசர்களில் ஈரம் படும்போது அதன் பாகங்கள் துருப்பிடிக்காதவாறு, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிவைப்பது இன்னும் சிறந்தது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications