சென்னை ஈசிஆரில் கார் - பேருந்து மோதி விபத்து.. 5 பேர் பரிதாப பலி
சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையின் தொடக்கத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் சென்ற தனியார் பேருந்து மீது புதுவையில் இருந்து வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

மிகவும் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்த பயணிகளுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.
விபத்துக்குள்ளானவர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காயம் அடைந்த 5 பேர் பலியாகிவிட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
[இறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்! ]
தற்போது இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைகு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications