சிக்கலில் வடசென்னை பாஜக வேட்பாளர்.. பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு! திமுக கோட்டை தகர்க்கப்படுமா?
சென்னை: வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து உள்ளன. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்கள்: பாஜக அண்மையில் வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல,
திருவள்ளூர் - பாலகணபதி
வடசென்னை - பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் - முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்தராஜன்
கரூர் - செந்தில்நாதன்
சிதம்பரம் - கார்த்தியாயினி
நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சை - எம்.முருகானந்தம்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
மதுரை - ராம சீனிவாசன்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
தென்காசி - ஜான் பாண்டியன்
புதுச்சேரி - நமச்சிவாயம்
ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
வடசென்னை: வடசென்னை மக்களவை தொகுதியில், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்), பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒட்டுமொத்த சென்னையும் தி.மு.கவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், அதிலும் குறிப்பாக வடசென்னை தி.மு.கவின் உறுதியான கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 11 முறை திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது.
திமுக கோட்டை: இதில் இரண்டு தேர்தல்கள் திமுக தோன்றுவதற்கு முன் நடந்தவை, அப்படி பார்த்தால் 14 தேர்தல்களில் 11 முறை தி.மு.க வென்று, தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. எம்.ஜி.ஆராலும் தி.மு.கவை வீழ்த்த முடியாத தொகுதியாக வடசென்னை இருந்துள்ளது. 2014 தேர்தலில் தான் முதன்முறையாக இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது.
அ.தி.மு.க தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற 2014 தேர்தலில் தான் முதல் முறையாக வடசென்னை தொகுதியில் வென்றுள்ளது. பின்னர் 2019 தேர்தலில் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும், மூத்த தி.மு.க தலைவருமான ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி களமிறங்கினார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் மோகன் ராஜை விட 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கலாநிதி வீராசாமி.
நேருக்கு நேர்: தி.மு.க கூட்டணியில் இந்த முறையும் தி.மு.கவே களமிறங்கியுள்ளது. மீண்டும் கலாநிதி வீராசாமிக்கே திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக இந்த முறை நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் இங்கு களமிறங்கியுள்ளார். பாஜக - அதிமுக - திமுக நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதியாக உள்ளது வடசென்னை. 3 கட்சிகளுமே வடசென்னையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு: இந்நிலையில், வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications