வாயைவிட்டு வழக்கு வாங்கிய சீமான்.. முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பற்றிய பேச்சால் சென்னை போலீஸ் ஆக்ஷன்
சென்னை: இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று அழைத்ததால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு அலை கிளம்பி இருக்கிறது.

அவர் பேசுகையில், "இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், சாத்தானின் குழந்தைகளாக அவை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேவாலயத்தில் போய் தேவரே வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் நடந்து இருக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியதே இஸ்லாமியர்கள், கிறிஸ்துவ மக்களும்தான். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்." என்று தெரிவித்தார்.
ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகத்துக்கு இவர்கள்தான் காரணம். நாம் எங்கு பாவத்தை இவர்களிடம்போய் கொடுப்பது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்கிறார்கள். பெரிய பாவமே அவர்கள்தான். அவர்கள் எங்கு மன்னிப்பது? இன்னும் பாருங்கள், இவர்கள்தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று சொல்வார்கள்.
திமுகதான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு. 20 வருடங்களாக வெளியில் விடாமல் சிறைக்கு உள்ளேயே வைத்து இருப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு. இஸ்லாமிய மக்களிடம் மறுபடியும் வாக்கு கேட்பார்கள். அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பேசுவார்களா இல்லையா என்று பாருங்கள்." என்றார்.
சீமானின் இந்த பேச்சுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளும் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.

ஆனால், சீமான் மீண்டும் மீண்டும் தனது கருத்தை தெரிவித்துக்கொண்டே இருந்தார். இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் சிறுபான்மையினர் என்று அழைத்தால் செருப்பால் அடிப்பேன் என அவர் கடுமையாக சாடினார். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களிடம் தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டால் அவர்கள் தனக்கு வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கு உள்ளானது.
தன்னை கண்டித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ராஜ்கிரண் போன்றோரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் சீமான் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications