Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இயற்கைக்கு மாறான மரணம்”.. சென்னை மெரினாவில் 5 பேர் பலி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணா சதுக்கம் காவல் நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், 92வது விமானப்படை தின நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதை காண 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் மெரினாவில் கூடினர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

chennai chennai air show 2024 police 2024

அதே நேரத்தில் சென்னையில் காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால், விமான சாகசங்களை காண வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் 90 க்கும் மேற்பட்ட நபர்கள் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) மற்றும் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48) ஆகியோர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இவர்கள் இருவரையும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சென்னை மடுவங்கவரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41) மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மணி (59) ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போதே உயிரிழந்தனர். சென்னை திருவொற்றியூர் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தார்.

சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மனைவி, குழந்தையை ஓரிடத்தில் இருக்க சொல்லிவிட்டு வாகனத்தை எடுத்துவர அவர் மட்டும் சென்றுள்ளார். பின்னர் வாகனத்தை எடுத்துக்கொண்டு திரும்பியவர் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். அவரை 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது கார்த்திகேயன் இறந்துவிட்டார்.

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த 5 நபர்களின் உடல்களும் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்ணா சதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+