தேர்தல் நெருங்குவதால் தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. 2,185 பேர் மீது பாய்ந்தது வழக்கு!
சென்னை: "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 14ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 2,185 இடைநிலை ஆசிரியர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்த விளைவித்தல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் விரைந்து தங்கள் கோரிக்கை தீர்க்கப்பட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி செய்யாத நாட்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், "சுமார் 5,000 ஆசிரியர்கள் சென்னையில் திரள்வதை முடக்கவே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதுபோன்ற மிரட்டல்களை எதிர்பார்த்தே நாங்கள் களத்தில் நிற்கிறோம். அசையாத அரசாங்கத்தை அசைத்துப் பார்ப்போம்; வெற்றி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது" என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசார், கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் எழும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் 2,185 இடைநிலை ஆசிரியர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications