டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!
சென்னை: செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்திய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) கடந்த 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட 25 கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரையிலான மின்மாற்றிகள் தொடர்பான டெண்டரில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இந்த டெண்டர் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததுடன், சில தனிநபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முறையற்ற ஆதாயம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2021 முதல் 2023 ஆம் வரையிலான காலகட்டத்தில், செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் மின்சார வாரிய டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications