கடைசி நிமிடம்! மருத்துவமனைக்கு தள்ளாடி தள்ளாடி சென்ற மாரிமுத்து..கண்ணீரை வரவழைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை: டப்பிங்க் செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் மாரிமுத்து, உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் தள்ளாடி தள்ளாடி செல்வது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Recommended Video
எதிர்நீச்சல் டிவி சீரியலில் அவர் பேசிய இந்தாம்மா ஏய் என்ற ஒற்றை வார்த்தைதான் பல ரசிகர்களை மாரிமுத்துவிற்கு கொடுத்தது. சினிமாவில் மாரிமுத்துவிற்கு கிடைத்த புகழை விட டிவி சீரியல் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்களையும் புகழ், செல்வாக்கை கிடைக்கச் செய்தது. பொது இடங்களுக்கு செல்லும் போது கூட மாரிமுத்து உடன் போட்டோ எடுக்க பலரும் விரும்புவார்களாம்

டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டப்பிங்கில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் இவர் தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட போதுதான் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாரிமுத்துவின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
மாரிமுத்துவின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எதிர்நீச்சல் டிவி சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போலவே கதறி துடித்தனர். எதிர்நீச்சல் சீரியலில் நெஞ்சுவலிக்குது பயமா இருக்குது என்று வசனம் பேசியிருப்பார் மாரிமுத்து.
அதே போல அவர் கடைசியாக பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் மாரிமுத்து மரணமடைந்தது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த போஸ்டர் முன்பு நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்திருப்பார் மாரிமுத்து. அந்த செல்ஃபி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நடிகர் மாரிமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. நாளைய தினம் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும். உறவினர்கள் உடன் செல்ல சீரியல், சினிமாவில் உடன் நடித்த பலரும் கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர்.
இதனிடயே, நெஞ்சுவலி ஏற்பட்ட பிறகு அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவனை சென்றதாக சொல்லப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மாரிமுத்து நடக்க முடியாமல் தடுமாறியபடி செல்வது இடம் பெற்றுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications