Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'காக்கா முட்டை' பட பாணியில் கொள்ளை.. திருடனை பிடிக்க முயன்று வாலிபர் பலி..சென்னை ரயிலில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் படிக்கட்டில் இருந்து செல்போன் பார்த்தபடி சென்ற பயணியை தாக்கி கொள்ளையன் செல்போன் பறித்து சென்றுள்ளான். கொள்ளையனை பிடிக்க முயற்சித்த போது ரயில் தண்டவாளத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில இளைஞர் பலியானார். காக்கா முட்டை பட பணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் ரயில்களும் சென்ட்ரலை நோக்கி செல்லும் ரயில்களும் சிக்னல் காரணமாக கொருக்குப் பேட்டை பகுதியில் மெதுவாக செல்வது வழக்கம்.

ரயில்கள் மெதுவாக செல்வதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் அப்பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் மற்றும் சமூக விரோதிகள் ரயிலில் படியில் நின்று பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

தொடரும் கொள்ளை சம்பவங்கள்

தொடரும் கொள்ளை சம்பவங்கள்

காக்கா முட்டை படத்தில் கூட இதேபோன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளில் இருந்து பணம் திருடுவது போன்ற குற்றச் செயல்களும் நடப்பதாக பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒருபக்கம் கூறப்பட்டாலும் மற்றொரு பக்கம் கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சிஐஎஸ்எப் வீரரிடம் செல்போன் பறிப்பு

சிஐஎஸ்எப் வீரரிடம் செல்போன் பறிப்பு

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டு அருகே நின்று செல்போனில் பேசிய வட மாநிலத்தை சேர்ந்த சி.ஐ.எஸ்.எப் வீரரான விவேக் குமார் என்பவரிடம் இருந்து செல்போனை கொள்ளையன் ஒருவன் பறித்து சென்றான். தண்டவாளம் அருகில் நின்ற படி கம்பால் அடித்து நொடிப்பொழுதில் செல்போனை கொள்ளையடித்து விட்டு கொள்ளையன் தப்பி சென்றான்.

மீண்டும் ஒரு சம்பவம்

மீண்டும் ஒரு சம்பவம்

இதில் நிலை தடுமாறி தண்டவளத்தில் விழுந்த விவேக் குமார் காயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் ஒரு செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. வாலிபரிடம் செல்போன் பறித்ததில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

படிக்கட்டில் அமர்ந்திருந்த வாலிபர்

படிக்கட்டில் அமர்ந்திருந்த வாலிபர்

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரோனி சேட் (வயது 24) என்பவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டு இருந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ரோனி சேட் செல்போன் பார்த்த படி வந்தார். ரயில் சென்னை கொருக்குப் பேட்டை அருகே வந்த போது வழக்கம் போல் ரயில் மெதுவாக சென்றது. அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த கொள்ளையன் படிக்கட்டில் இருந்து செல்போன் பார்த்துக் கொண்டு இருந்த ரோனி சேட்டின் கையில் இருந்த செல்போனை லாவகமாக பறித்தான்.

தவறி விழுந்து பலி

தவறி விழுந்து பலி

இதனால் திடுக்கிட்ட ரோனி சேட் கொள்ளையனை பிடிக்க முயற்சித்தார். அப்போது ரோனி சேட் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலைப்பகுதியில் ரோனிசேட்டிற்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே ரோனி சேட் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் இந்த கோர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் அலறினர். உடனடியாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், ரோனி சேட் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்ககா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கட்டிட வேலைக்காக ரேனி சேட் சென்னை வந்தது விசாரணையில் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+