PMAY திட்டத்தில் 40 லட்சம் வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம்
சென்னை: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்த ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார். இந்த திட்டத்தில் வீடுகள் கட்ட விண்ணப்பிப்பது எப்படி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எம்பிக்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பதிலளித்தார்.

அப்போது அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பேசுகையில், "2025-26ம் நிதியாண்டில் அசாம், பீகார், சத்தீஷ்கார், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களில் 84.37 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 40 லட்சம் வீடுகளுக்கு (39.82 லட்சம்) இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அசாம், ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 46.56 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
PMAY- U 2.0 திட்டத்தில் யாருக்கு வீடுகள் கிடைக்கும்: PMAY திட்டத்தில் குடிசைவாசிகள், எஸ்சி/எஸ்டி மக்கள், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் தெருவோர வியாபாரிகள், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளது.
PMAY- U 2.0 திட்டத்தில் வீடுகள் பெற தகுதிகள்: PMAY- U 2.0 திட்டத்தில் வீடு பெற விரும்புவோருக்கு எங்குமே சொந்தமாக வீடு இருக்கக்கூடாது.EWS என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை இருக்க வேண்டும். நடுத்தர வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை இருக்க வேண்டும். நீங்கள் இதற்கு முன்னர் அரசாங்கத்தின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் எந்தவொரு நிதி உதவியையும் பெற்றிருக்கக் கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க முடியாது. PMAY- U 2.0 திட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.19,794 கோடி ஒதுக்கியுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: https://pmaymis.gov.in/pmaymis2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஆதார் உள்ளிட்ட தேவையான அணைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications