Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PMAY திட்டத்தில் 40 லட்சம் வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்த ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார். இந்த திட்டத்தில் வீடுகள் கட்ட விண்ணப்பிப்பது எப்படி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எம்பிக்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பதிலளித்தார்.

central govt notification pmay pradhan mantri awas yojana

அப்போது அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பேசுகையில், "2025-26ம் நிதியாண்டில் அசாம், பீகார், சத்தீஷ்கார், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களில் 84.37 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 40 லட்சம் வீடுகளுக்கு (39.82 லட்சம்) இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அசாம், ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 46.56 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.

PMAY- U 2.0 திட்டத்தில் யாருக்கு வீடுகள் கிடைக்கும்: PMAY திட்டத்தில் குடிசைவாசிகள், எஸ்சி/எஸ்டி மக்கள், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் தெருவோர வியாபாரிகள், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளது.

PMAY- U 2.0 திட்டத்தில் வீடுகள் பெற தகுதிகள்: PMAY- U 2.0 திட்டத்தில் வீடு பெற விரும்புவோருக்கு எங்குமே சொந்தமாக வீடு இருக்கக்கூடாது.EWS என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை இருக்க வேண்டும். நடுத்தர வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை இருக்க வேண்டும். நீங்கள் இதற்கு முன்னர் அரசாங்கத்தின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் எந்தவொரு நிதி உதவியையும் பெற்றிருக்கக் கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க முடியாது. PMAY- U 2.0 திட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.19,794 கோடி ஒதுக்கியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: https://pmaymis.gov.in/pmaymis2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஆதார் உள்ளிட்ட தேவையான அணைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+