கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது.. தமிழிசை விளக்கம்!
கஜா புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. மக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு சார்பாக இதுவரை ஒரு ரூபாய் கூட அளிக்கப்படவில்லை. இது தமிழக மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய குழு தற்போது தமிழகம் முழுக்க இதற்காக புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் கஜா நிவாரணத்தில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு உதவி வருகிறது. மத்திய அரசின் உதவி இன்றி மாநில அரசு இவ்வளவு வேகமாக செயல்பட முடியாது.
மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் கூட சிலர் மத்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள்.
மத்திய அரசின் உதவியோடுதான் பணிகளே நடக்கிறது. மத்திய அரசின் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய நிவாரண பணி வேகமாக நடக்குமா சொல்லுங்கள்.
என்னால் தினமும் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடியாது. மக்கள்தான் மத்திய அரசின் உதவியை புரிந்து கொள்ள வேண்டும், என்று தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications