மக்களே அலார்ட்.. சென்னை உள்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
அதனை தொடர்ந்து சில நாட்களாக நாட்களாக பெரிதாக மழை பெய்யவில்லை. ஒருசில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது.
1,2,3,4.. வந்தாச்சு புது அறிவிப்பு.. இன்று முதல் 4 நாட்களுக்கு செம்ம மழை இருக்காம்.. ஹேப்பி
சென்னையில்..
சென்னையை பொறுத்தவரையில் கடந்த இரு தினங்களாக பெரிதாக மழை எதுவும் பெய்யவில்லை. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக நேற்று சென்னையில் மழை பெய்ததற்கான சுவடே இல்லாத வகையில் வெப்பம் சற்று அதிகரித்து இருப்பதாக மக்கள் பேசிக்கொள்வதையும் பார்க்க முடிந்தது. அதேபோல் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்று சற்று குறைந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
இதற்கிடையே நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 29 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" என்றும் தெரிவித்தது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு
மேலும் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகம், காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மழை..
இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை அளவு
முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தண்டரம்பேட்டை (திருவண்ணாமலை) 5,செங்கம் (திருவண்ணாமலை) 3, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 2, மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தருமபுரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 1 (செ.மீ) மழை பெய்துள்ளதாக தெரிவித்து இருந்தது.