விண்ணில் பாயத் தயார் நிலையில் சந்திராயன் 3 விண்கலம்! 2 நாட்களில் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!
சென்னை: சந்திராயன் 3 விண்கலம் வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35க்கு விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான கவுண்ட் டவுன் இன்னும் 2 நாட்களில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஸ்டார்ட் ஆகவுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 1 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட நிலையில் சந்திராயன் 2 திட்டம் வெற்றியடையவில்லை. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 2 தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது.

இந்நிலையில் சந்திரயான்-2ஐ தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் பணியை மேற்கொள்ளும் திறனுடன் விண்ணில் ஏவப்படவுள்ளது.. சந்திராயன் 3ஐ பொறுத்தவரை லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயன் 3ஐ விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூலை 14ஆம் தேதி அன்று சந்திராயன் 3 விண்ணில் பாய்ச்சப்படும். இதற்கான கவுண்ட் டவுன் வரும் வியாழக்கிழமையே தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயன் 3 விண்கலத்தை பொறுத்தவரை முறையாக தரையிறங்காவிட்டால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்தால் என்ன செய்வது, என்பன உள்ளிட்ட எந்தெந்த வகைகளில் எல்லாம் தோல்விகள் ஏற்படுமோ அதனை அடிப்படையாக வைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.
சந்திராயன் 3 விண்கலத்தில் அதிகளவில் எரிபொருள் நிரப்பும் வசதி இருப்பதுடன் விக்ரம் லேண்டரில் கூடுதல் சோலார் பேனல்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications