ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
சென்னை: ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்கள் மத்தியில் புதிய உத்வேகம் கிடைக்கக் கூடும் என்றும் புது இடம் புது ஊர் என்ற அடிப்படையில் பணிகள் சுணக்கமின்றி நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கவுன்சிலிங் மூலம் இடம் மாறுதலை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால் இடைத்தரகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் அந்த துறையில் புது புது மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புகார் இல்லாமல்
பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்புடைய அலுவலகங்களில் புகார்கள் எழுவதை தடுக்கும் நோக்கத்திலும், ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள், ஆகியோருக்கு இனி கலந்தாய்வு மூலம் மட்டுமே மாறுதல் வழங்கப்படும்.

நிதிக்காப்பாளர்
இந்நிலையில் முதல்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை நிதிக்காப்பாளர்களுக்கு வரும் 27ஆம் தேதி இடம் மாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை உதவியாளர்கள், உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்படவுள்ளது.

முக்கிய மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. இதனிடையே முழுக்க முழுக்க கவுன்சிலிங் மூலம் மட்டும் இடம் மாறுதலை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உறுதியாக இருப்பதால் இடைத்தரகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications