Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கல்.. பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏ-க்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பிறகு மறுபடியும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

 Charge sheet filed in Minster Senthil Balaji money laundering case

தற்போது நீதிமன்றக்காவலில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு கிட்டதட்ட 3 மாதங்களாகும் நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. முதலில், ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜுன் 28-ந்தேதி வரை என்று உத்தரவிட்டது..

அதன்பிறகு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.. பின்னர், ஜூலை 26-ந்தேதி வரையில் 3-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. பிறகு ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவலை பிறகு ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டது.இப்படியாக தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இடையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்பி, எம்எல்ஏக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். போலீசார் தாக்கல் செய்த 3 குற்றப்பத்திரிக்கையிலும் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+