ஆய்வாளர் காலைப்பிடித்து.. சட்டென சிகிச்சை தந்த செங்கல்பட்டு எஸ்.பி.. மருத்துவராக மாறிய ஐபிஎஸ்!
சென்னை: காவல் ஆய்வாளர் ஒருவர் காலை பிடித்து செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி விஜயகுமார் திடீரென முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார், எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர். பின்னர் சிவில் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். காவல்துறையில் பொதுவாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள் தங்களை விட ரேங்கில் குறைவாக இருக்கும் அதிகாரிகளிடம் அவ்வளவு நெருக்கமாக பழக மாட்டார்கள்.
கொஞ்சம் அதிகார இடைவெளியை ஐபிஎஸ் அதிகாரிகள் கடைபிடிப்பதே வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர்.

வித்தியாசம்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார், காவல் ஆய்வாளர் தொடங்கி அனைத்து ரேங்க் அதிகாரிகளிடம் தன்மையாக பழக கூடியவர். அலுவல் ரீதியான கண்டிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், சக அதிகாரிகளிடம், தன்னை விட ரேங்க் குறைவாக கொண்ட அதிகாரிகளிடம் தன்மையாக, நட்பாக பழகும் குணம் கொண்டவர். பணியில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த அதிகாரி இவர்.

முக்கிய பங்கு
திருப்பத்தூரில் எஸ்.பியாக இருந்தபோது கொரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்டு மக்களின் மதிப்பைப் பெற்றார். எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். பரவலை கட்டுப்படுத்துவதிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார். தற்போது செங்கல்பட்டு எஸ்.பியாக பணியாற்றி வருகிறார்.

நெகிழ்ச்சி
இந்த நிலையில்தான் நேற்று இவர் செய்த செயல் ஒன்று காவல்துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஒன்றிய தலைவர்கள் தேர்தல் நடந்து வருகிறது. ஆங்காங்கே மோதல் வெடிக்கும் நிலையில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் வாக்கு செலுத்த பாதுகாப்பாக வர வேண்டும் என்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

விஜயகுமார்
இந்த நிலையில் மதுராந்தகத்தில் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட மாவட்ட எஸ்.பி டாக்டர். விஜயகுமார் வந்தார். மதுராந்தகம் பகுதியில் எஸ்பி விஜயகுமார் ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் பதற்றத்தில் ஓடி வரும் பொழுது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

துடித்தார்
இதனால் அதற்கு மேல் நடக்க முடியாமல் அந்த இடத்திலேயே காலை பிடித்தபடி அந்த காவல் ஆய்வாளர் உட்கார்ந்தார். அந்த காவல் ஆய்வாளர் அங்கேயே காலை பிடித்துக்கொண்டு வலியில் துடித்தார். அப்பொழுது அதை பார்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக சென்று, அந்த ஆய்வாளர் காலை பிடித்து சோதனை செய்தார்.

வேகமாக வந்தார்
மருத்துவம் படித்தவர் என்பதால் அங்கேயே பாதிக்கப்பட்ட ஆய்வாளர் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். இதனால் கால் பிடிப்பு சரியான அதிகாரி எழுந்து மெதுவாக நடந்தார். காவல் ஆய்வாளர் ஒருவர் காலை பிடித்து எஸ்பி ரேங்க் அதிகாரி ஒருவர் திடீரென இப்படி முதலுதவி செய்தது அந்த சக காவலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications