செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை..நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பீதியில் உறைந்த மக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக். இவர்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல்நிலையம் எதிரே உள்ள டீக்கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்திறங்கியது. அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கார்த்திகை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும்,. கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்

தலையை சிதைத்துவிட்டு சென்றனர்
இதில் படுகாயம் அடைந்த காத்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கும்பல் கார்த்திக்கின் தலையை உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கு இருந்து தப்பி ஒடி விட்டது. இதேபோல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ்( 22) . மகேஷ் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

இன்னொரு கொலை
அப்போது கார்த்திகை கொலை செய்து விட்டு தப்பிய அதே கும்பல் அங்கு வந்துள்ளது. மகேஷையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஒட்டி விட்டது. படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த இரண்டு கொலைகள் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மர்ம கும்பல் யார்?
இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் நடந்த இந்த இரண்டு இடமும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகும். மர்ம கும்பல் துணிச்சலாக வந்து இந்த கொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறது.

பீதியில் உறைந்த மக்கள்
இந்த கொலை எதனால் நடந்தது? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்த 2 பேர் படுகொலை செய்யப்பட்டதால் செங்கல்பட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications