செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை..நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பீதியில் உறைந்த மக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக். இவர்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல்நிலையம் எதிரே உள்ள டீக்கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்திறங்கியது. அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கார்த்திகை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும்,. கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்

தலையை சிதைத்துவிட்டு சென்றனர்
இதில் படுகாயம் அடைந்த காத்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கும்பல் கார்த்திக்கின் தலையை உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கு இருந்து தப்பி ஒடி விட்டது. இதேபோல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ்( 22) . மகேஷ் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

இன்னொரு கொலை
அப்போது கார்த்திகை கொலை செய்து விட்டு தப்பிய அதே கும்பல் அங்கு வந்துள்ளது. மகேஷையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஒட்டி விட்டது. படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த இரண்டு கொலைகள் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மர்ம கும்பல் யார்?
இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் நடந்த இந்த இரண்டு இடமும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகும். மர்ம கும்பல் துணிச்சலாக வந்து இந்த கொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறது.

பீதியில் உறைந்த மக்கள்
இந்த கொலை எதனால் நடந்தது? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்த 2 பேர் படுகொலை செய்யப்பட்டதால் செங்கல்பட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications