கட்டிட அனுமதி எங்கே.. சென்னையில் 25 ஆண்டுக்கு முன்பு கட்டிய 2 வீடுகளுக்கு சீல்.. மக்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னை திருவொற்றியூரில் ஒத்தவாடை தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 2 வீடுகளுக்கு கட்டிட அனுமதி பெறவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக 'சீல்' வைத்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளுக்கு இப்போது அனுமதி எங்கே? என கேட்டு பல வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை அருகே ஒரு காலத்தில் திருவொற்றியூர் ஊராட்சியாக இருந்தது.. அதன்பிறகு நகராட்சியமாகமாறியது. அடுத்ததாகவே சென்னை மாநகராட்சிக்குள் மாறியது. இங்கு அந்த காலக்கட்டத்தில் கட்டிய வீடுகள் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்போது அதற்கு அனுமதி எங்கே என்றுகேட்டு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அந்த வகையில் திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் பஞ்சாட்சரம், ஜானகிராமன் ஆகியோரது வீடுகள் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாம். இதில் ஒரு வீடு 400 சதுர அடியிலும், மற்றொரு வீடு 600 சதுர அடியிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீடுகள் மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்டு இருப்பதாக புகாரை சிலர் அனுப்பி உள்ளார்கள்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் பாபு தலைமையில் இளநிலை பொறியாளர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அங்கு வந்தனர். அவர்கள் மாநகராட்சி அனுமதி பெறவில்லை என்று கூறி 2 வீடுகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி பகுதியில் புதிதாக வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி பெறவேண்டும் என்பது அரசு விதியாக உள்ளதால் சீல் வைக்கப்பட்டதாக கூறப்டுகிறது.. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் ஊராட்சியாக இருந்து நகராட்சியாக மாறி, தற்போது மாநகராட்சியில் இணைந்து உள்ளது. அப்படி இருக்கையில் எப்படி சீல் வைக்க முடியும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதுவும் 25 வருடம் முன்புகட்டப்பட்ட வீடுகளுக்குகூட தற்போது அனுமதி பெறவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக யாராவது புகார் அனுப்பி உள்ளதாக குற்றம்சாட்டும் அக்கம் பக்கத்தினர். அந்த வீடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய அனுமதி இல்லை என்று கூறி 'சீல்' வைப்பது சரியல்லை என்றும் கூறினார்கள்.
இது குறித்து சென்னை மாநகராட்சி 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் கூறுகையில், சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி வீடுகள் கட்டப்படவேண்டியது தான். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளுக்கு இப்போது அனுமதி எங்கே? என கேட்கிறார்கள். இந்த காரணத்திற்காக பல வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். திருவொற்றியூரில் இதுபோன்று 52 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இவர்கள் வீடுகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஒரு சில வீடுகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதிகாரிகள் மனிதாபிமானம் பார்க்க வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏராளமாக உள்ளது. ஆனால் அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை எளியோர் பாதிக்கும் அளவில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.
-
மதுரவாயல் டிராபிக் சென்னையில் மாறுவது இப்படித்தான்! 7 நாளில் இந்த ரூட்டில் போக முடியாது.. சர்ப்ரைஸ் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம் -
முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை! பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு! -
சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்? -
டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை -
பாஸ்போர்ட் ஆவணங்கள் அவசியம்.. சென்னை ஏர்போர்ட்டில் யாரிந்த நிழல் மனிதர்கள்.. அசிங்கப்பட்ட பெண்கள் -
பட்டா மாறுதல் செய்ய இதோ ஆன்லைனில் ஈஸி வழி? லோன் கிடைப்பதில் சிக்கல்? 24 மணி நேரத்தில் தீர்வு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications