கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் சென்னை மீண்டு வரும் - முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து
சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும் என்று கூறியுள்ளார
சென்னை: தமிழகத்தின் தலைநகரம் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார். பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை கொரோனா பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு வரும் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381.பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார்.
துணைமுதல்வர் வாழ்த்து

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை தினத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று! வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும் என பதிவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications