வாயில் சர்க்கரை மாத்திரையை போட்டுக் கொண்டு.. ஆசிட்டை எடுத்து குடித்த மேனகா.. கொடுமை!
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பாட்டி பலி
சென்னை: தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்துவிட்டார் 60 வயது பாட்டி.. இறுதியில் துடிதுடித்தே அவரது உயிர் பிரிந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த ஐயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்.. இவர் தனது மனைவி சுமதி.. இவரது அம்மா மேனகா.. 60 வயதாகிறது.. ஒரே வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். மேனகா அம்மாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது.

நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி இருந்ததால், இவருக்கு கண் பார்வை குறைபாடும் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் சுகர் மாத்திரையை வாயில் போட்டு கொண்டு, தண்ணீர் எடுத்து குடிக்க போனார்.. ஆனால், தண்ணீரை குடிக்க முயற்சித்த மேனகா தவறுதலாக அங்கிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்து விட்டார்.
கொஞ்ச நேரத்தில் தொண்டை, நெஞ்செரிச்சல் தாங்காமல் அலறியுள்ளார்.. ஆனால் அப்போது வீட்டில் யாரும் இல்லை.. ஆனால், அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மேனகாவை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்... பிறகு, மேனகாவை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எவ்வளவோ தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் மேனகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்... ஆசிட் பயன்பாடுகள் இப்போது குறைந்துவிட்டது.. நிறைய கடைகளில் ஆசிட் விற்கப்படுவதும் இல்லை.. ஆனால் சர்வசாதாரணமாக ஆசிட்டை வீட்டில் கைக்கு எட்டும்படி வைத்திருந்தது அதிர்ச்சியாக இருக்கிறது.. அதிலும் கண்பார்வை குறைவாக உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் இப்படி அலட்சியமாக இருந்தது அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது.. தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்து பலியான மேனகா அம்மாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications