மனைவியுடன் சண்டை. இடுப்பில் மறைச்சு வச்ச கத்தி.. எடுத்தபோது படாத இடத்தை தாக்கியதில் கணவன் சாவு
Recommended Video
சென்னை: மனைவியுடன் சண்டை போட்ட மனோகரனை பக்கத்து வீட்டுக்காரர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது நடந்த தகராறில் இடுப்பில் மறைத்து வைத்த கத்தியை எடுக்க மனோகரன் முற்பட்ட போது எதிர்பாராத விதமாக கத்தி அவரது வயிறு மற்றும் பிறப்புறுப்பை கிழித்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
சென்னை, வில்லிவாக்கத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் மனோகரன் (28). இவர் சரிதா (24) என்பவரை ஒரு வருசத்துக்கு முன்பு கல்யாணம் செய்திருக்கிறார்.
இந்த தம்பதிக்கு கல்யாண வாழ்க்கை ஆரம்பத்திலேயே மோதலில் ஆரம்பிச்சுருக்கு. எல்லாம் இந்த பாழாய் போன குடிப்பழக்கம் தான் காரணம். இவருக்கும் இடையே கல்யாணம் ஆன சில நாளிலேயே கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டது.

சித்ரவதை
அடிக்கடி மனோகர் குடித்துவிட்டு சரிதாவை அடிப்பதையும், துன்புறுத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன சரிதா அயனாவரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவாராம். பின்னர் சமாதனம் ஆகி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

குடிபோதையில் சண்டை
அப்படித்தான் அண்மையில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சரிதா சென்றிருள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு குடிபோதையில் அங்கு மனோகர் வந்திருக்கிறார்.
அங்கு அவர் மதுபோதையில் கண்டபடி பேசி தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர்
அப்போது சத்தம் கேட்டு சரிதாவின் தாய் வீட்டின் அருகே வசித்து வந்த ராகவேந்திரன் (65) வந்து ஏன் இப்படி சத்தம் போடுகிறாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பாகி உள்ளது.

ராகவேந்தர் படுகாயம்
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் மனோகரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications