சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து- கூடுதல் வழித்தடங்களில் 'மெட்ரோ’
சென்னை: சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கூடுதல் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், சென்னை கடற்கரை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கான மின்சார ரயில்கள் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்- செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும் ரத்து செய்யப்படும்; சென்னை கடற்கரைக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 மணி முதல் 3.20 மணி வரை ரத்து செய்யப்படும்.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்படுகிறது; காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து காலையில் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் மின்சார ரயில் சேவைகள் ஒரே நாளில் பெருமளவு ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவைகள் கூடுதல் வழித்தடங்களில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications