சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை நவம்பர் முதல் ஆரம்பம்.. பார்க்கில் நடக்கும் மாற்றம்
சென்னை: சென்னை எழும்பூர்-கடற்கரை நான்காவது ரயில் பாதை திட்டத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை துண்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை, மீண்டும் இயல்பு நிலைக்கு வரப்போகிறது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவைகள் வரும் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எம்.செந்தமிழ் செல்வன் உறுதி செய்துள்ளார்.
சென்னையில் மிகவும் முக்கிய மின்சார ரயில் வழித்தடம் என்றால் அது, சென்னை கடற்கரை வேளச்சேரி வழித்தடம் தான். இந்த வழித்தடத்தில் தான் சென்னை கோட்டை (தலைமை செயலகம்), சிந்தாரிப்பேட்டை (அரசின் ஓமந்தூரார் மருத்துவமனை), சேப்பாக்கம் (கிரிக்கெட் ஸ்டேடியம், அண்ணா சதுக்கம்), திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரை, பார்த்த சாரதி கோயில்), கலங்கரை விளக்கம் (மெரினா கடற்கரை, டிஜிபி ஆபிஸ், ராணிமேரி கல்லூரி) ஆகியவை உள்ளன. இதேபோல் மயிலாப்பூர், மந்தைவெளி, கோட்டூர்புரம், அடையாறு, திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி என சென்னையின் தகவல் தொழில்நுட்ப பகுதிகளை இணைக்கிறது. சென்னையில் ஐடி நிறுவனங்கள், கார்ப்பேரேட் நிறுவனங்கள் அண்ணா சாலை முதல் வேளச்சேரி வரை உள்ள பகுதிகளில் தான் அதிகமாக உள்ளன.

இதன் காரணமாகவே சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் முக்கியத் தடமாக திகழ்கிறது. சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பறக்கும் ரயில் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 80 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. முன்னதாக சென்னை கடற்கரை வரை ரயில் சென்று வந்தபோது தினசரி 150 ரயில் சேவை இயங்கி வந்தது.
இந்த ரயில் சேவைகளால் வேளச்சேரி பகுதியில் மட்டும், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வேளச்சேரி ரயில் வழித்தடத்தில் சிந்தாரிப்பேட்டை முதல் கடற்கரை வரை பணிகள் முடிந்து எப்போது ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அண்மையில் மெரினாவில் விமானப்படை சாகசம காரணமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் கூடினார்கள். வேளச்சேரி ரயில் நிலையம் இதுவரை காணாத கூட்டத்தை கண்டது. இதையடுத்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் பணிகள் காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தெற்கு ரயில்வேயை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஏனெனில் சிந்தாதிரிப்பேட்டை-கடற்கரை இடையே கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட போது, அடுத்த 6 மாதத்தில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே கூறியது. ஆனால் சொன்னபடி ஆரம்பிக்கவில்லை.. ஓராண்டை தாண்டிவிட்டது. இதனால் பலரும் அவதிப்படும் நிலை தொடர்கிறது. நடைமேடை இடிப்பு காரணமாக சிந்தாதிரிப்பேட்டையைத் தாண்டி,பார்க் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் தரையிரங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது..
இந்நிலையில் பார்க் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் தற்போது கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டது. தற்போது நடைமேடைகளை அமைப்பது மற்றும் மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைப்பத என சில குடிமராமத்து பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதேநேரம் பணிகளை விரைவாக முடித்து நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே வழக்கம் போல் மின்சா ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எம்.செந்தமிழ் செல்வன் உறுதி செய்துள்ளார்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications